Posts

Showing posts from August, 2019

கனவின் வெளிச்சம்

கனா கண்டேன்!!  தோழி !!! அவளுக்கு  இது புதிதாக இருந்தது .அந்த அனுபவம் இது வரை அவளுக்கு ஏற்பட வாய்ப்பு இல்லை . இது என்ன , சபலமா , சஞ்சலமா , சங்கடமா .., என்ன ஒரு உபாதை . உபாதை என்று சொல்வதை விட ஒரு உன்னத அனுபவம் என்று தான் சொல்ல வேண்டும் . காரணம் , அவள் வீட்டுக்கு ஒரே பெண் குழந்தை . செல்லமாக வளர்ந்தவள். அப்பா தமிழ் ஆசிரியர் . அம்மா சும்மாவா . எல்லாம் அவள் தான் . ரொப்ப கெடுபிடி . அடிக்கடி உலகம் கெட்டுப்  போய் இருக்கிறது. ஜாக்கிரதை ,ஜாக்கிரதை என்று சொல்லி பள்ளி, வீடு என்று வளர்த்தவள் . கடைசியாக ராமநாதபுரத்தில் இருந்து தஞ்சைக்கு தலைமை ஆசிரியராக மாற்றப்பட்டார் என் அப்பா . வேறு வழி இன்றி அப்பா அரவணைப்பில் இருந்த நான் 10 வது வகுப்பில் Co - Ed School ல் சேர்க்கப்பட்டேன். பல நாட்கள் கடந்தது . தோழிகள் கிடைத்தனர் .பலர் தோழனுடன் சகஜமாக பழகினர் . எனக்கோ பயம். அதை விட கூச்சம் என்று தான் சொல்ல வேண்டும் . அப்படி இருந்தும் சுரேஷ் மட்டும் என்  மனதில் ,கற்பனையில் , கனவில் அடிக்கடி வருகிறான் . அவன் அழகு இல்லை .நண்பர்களுடன் பார்ப்பது அரிது . தனிமை விரும்பியோ என்ற ச