தனிமை X தன்னுணர்வு

 தனிமை X தன்னுணர்வு


தனிமை என்பது தவிர்க்க முடியாத ஒன்று. பிறப்பில் இருந்து இறப்பு வரை நம்மிடையே வரும் ஒரு உலகம்-தனிமை.


ஒரு கூட்டத்தில் , குடும்ப விழாவில், அலுவலகத்தில் , பள்ளிப் பருவத்தில் என பல வேறு சந்தர்பங்களில் நாம் நம்மை கடக்க முடியாமல் தனிமையில் வாடி இருப்போம்.


இதை யாரும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது.


நம் வலி, நம் குடும்பம், நம் சந்தோஷம் , நம் வாழ்வு என்று இருப்பவர்களுக்கு இந்த வலி "அதிகம்" வரும்.


இதுவே ஒரு சந்நியாசி யின் நிலையில் இருந்து பார்த்தால், அவர் உலகமே இதற்கு எதிர்மறையாக இருக்கும்.


காரணம் ; அவர்தம் தன்னுணர்வு



நாம் தன் உணர்வு கொள்ளும்போது நம்மிடையே


ஒரு மீட்சி,


ஒரு அறம்,


ஒரு முழுமை ;


தோன்றுவதை உணரலாம்.


அதுவே பரிபூரண வாழ்வு;

இதைத்தான் "பாகவதம்" கூறுவதாக "ஜெய மோகன்" - தமிழில் இன்றைய இலக்கிய வட்டாரங்களில் அதிகம் பேசப்படும் எழுத்தாளர்- தன் "Magnum opus " என்று அறியப்படும் "வெண்முரசில் " கூறுகிறார்.



எப்போது உங்கள் தனிமை

தன்னிறைவு பெறும்.


Eg. Mahatma Gandhi,


சராசரி இந்தியனின் அடையாளமாக இருந்தார்-Simple Attire - ஒரு கோமணத் துண்டு.



அவர் கூறுகிறார்: " நான் காட்டில் இருந்து கொண்டு 'ஜிலேப்பிக்கு '

ஆசைப்பட்டது இல்லை. ஜலேப்பிக் கடையில் இருந்து கொண்டு ஜிலேப்பியை ஜிலேப்பியாக பார்ப்பவன்.


சாவி - எழுத்தாளர்-நவகாளியாத்திரை.


அவ்வாறாக தன் உணர்வு கொள்பவர்களுக்கு,


குடும்பத்தில்,

வாழ்க்கையில்,

சமூகத்தில்,

அலுவலகத்தில்,

நண்பர்கள், உறவுகள் மற்றும் இன்ன பிற ஜீவன்களிடமும் ஒரு "உன்னத உணர்வு மூலம் உறவு"

கொண்டு வாழ்வாங்கு வாழ்வார்கள்.


"முதுமை என்ற தனிமை " வரை காத்துக் கிடக்கத் தேவை இல்லை.



இரண்டு உதாரணங்கள்.


முதுமையிலும் இளம் துடிப்புடன் செயல் பட்ட


1.மகாத்மா காந்தி;


இளமையிலேயே தன்னை மறந்து சமூக மேம்பாட்டிற்காக காலத்தை வென்ற


2. மகாகவி பாரதி.


இதே நம் மகாகவி சொல்கிறார்.


"காக்கை குருவி எங்கள் ஜாதி-நீள


கடலும் , மலையும் எங்கள் கூட்டம்,


நோக்கம் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை


நோக்க நோக்கக் களி யாட்டாம்".


கடலையும், மலையையும் நம் இனமாகவே பார்த்தார். பரவசம் அடைந்தார்.


இதுவே இன்று " Global warming" என்ற பட்டத்துடன் " Green-Revolution" என்ற அடைச் சொல்லுடன் ஒரு சொல்லாடலாகப்பட்டு தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது.


பாரதி போன்ற ஒரு கவிஞன் இனி பிறக்கப் போவது இல்லை. ஜாதி, மதம் ,இனம் ,மொழி கடந்து எல்லோரையும் நேசித்த மகாத்மாவாக பாரதி வாழ்ந்தார்.


வாழ்க்கையில் , சிந்தனையில் காந்தியத்தையும், பாரதியையும் தன் உணர்வாகக் கொண்டு செய்கிற வேலையில் முழுமை பெறுவோம்.



தனிமை என்று தனித்து ஒன்று இல்ல.


அது ஒரு மன நிலை.


இரா.செ.




Comments

Popular posts from this blog

வாழ்க்கை என்பது எவ்வளவு தூரம் ?

அடங்க மறு ...,,,