தனிமை X தன்னுணர்வு

 தனிமை X தன்னுணர்வு


தனிமை என்பது தவிர்க்க முடியாத ஒன்று. பிறப்பில் இருந்து இறப்பு வரை நம்மிடையே வரும் ஒரு உலகம்-தனிமை.


ஒரு கூட்டத்தில் , குடும்ப விழாவில், அலுவலகத்தில் , பள்ளிப் பருவத்தில் என பல வேறு சந்தர்பங்களில் நாம் நம்மை கடக்க முடியாமல் தனிமையில் வாடி இருப்போம்.


இதை யாரும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது.


நம் வலி, நம் குடும்பம், நம் சந்தோஷம் , நம் வாழ்வு என்று இருப்பவர்களுக்கு இந்த வலி "அதிகம்" வரும்.


இதுவே ஒரு சந்நியாசி யின் நிலையில் இருந்து பார்த்தால், அவர் உலகமே இதற்கு எதிர்மறையாக இருக்கும்.


காரணம் ; அவர்தம் தன்னுணர்வு



நாம் தன் உணர்வு கொள்ளும்போது நம்மிடையே


ஒரு மீட்சி,


ஒரு அறம்,


ஒரு முழுமை ;


தோன்றுவதை உணரலாம்.


அதுவே பரிபூரண வாழ்வு;

இதைத்தான் "பாகவதம்" கூறுவதாக "ஜெய மோகன்" - தமிழில் இன்றைய இலக்கிய வட்டாரங்களில் அதிகம் பேசப்படும் எழுத்தாளர்- தன் "Magnum opus " என்று அறியப்படும் "வெண்முரசில் " கூறுகிறார்.



எப்போது உங்கள் தனிமை

தன்னிறைவு பெறும்.


Eg. Mahatma Gandhi,


சராசரி இந்தியனின் அடையாளமாக இருந்தார்-Simple Attire - ஒரு கோமணத் துண்டு.



அவர் கூறுகிறார்: " நான் காட்டில் இருந்து கொண்டு 'ஜிலேப்பிக்கு '

ஆசைப்பட்டது இல்லை. ஜலேப்பிக் கடையில் இருந்து கொண்டு ஜிலேப்பியை ஜிலேப்பியாக பார்ப்பவன்.


சாவி - எழுத்தாளர்-நவகாளியாத்திரை.


அவ்வாறாக தன் உணர்வு கொள்பவர்களுக்கு,


குடும்பத்தில்,

வாழ்க்கையில்,

சமூகத்தில்,

அலுவலகத்தில்,

நண்பர்கள், உறவுகள் மற்றும் இன்ன பிற ஜீவன்களிடமும் ஒரு "உன்னத உணர்வு மூலம் உறவு"

கொண்டு வாழ்வாங்கு வாழ்வார்கள்.


"முதுமை என்ற தனிமை " வரை காத்துக் கிடக்கத் தேவை இல்லை.



இரண்டு உதாரணங்கள்.


முதுமையிலும் இளம் துடிப்புடன் செயல் பட்ட


1.மகாத்மா காந்தி;


இளமையிலேயே தன்னை மறந்து சமூக மேம்பாட்டிற்காக காலத்தை வென்ற


2. மகாகவி பாரதி.


இதே நம் மகாகவி சொல்கிறார்.


"காக்கை குருவி எங்கள் ஜாதி-நீள


கடலும் , மலையும் எங்கள் கூட்டம்,


நோக்கம் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை


நோக்க நோக்கக் களி யாட்டாம்".


கடலையும், மலையையும் நம் இனமாகவே பார்த்தார். பரவசம் அடைந்தார்.


இதுவே இன்று " Global warming" என்ற பட்டத்துடன் " Green-Revolution" என்ற அடைச் சொல்லுடன் ஒரு சொல்லாடலாகப்பட்டு தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது.


பாரதி போன்ற ஒரு கவிஞன் இனி பிறக்கப் போவது இல்லை. ஜாதி, மதம் ,இனம் ,மொழி கடந்து எல்லோரையும் நேசித்த மகாத்மாவாக பாரதி வாழ்ந்தார்.


வாழ்க்கையில் , சிந்தனையில் காந்தியத்தையும், பாரதியையும் தன் உணர்வாகக் கொண்டு செய்கிற வேலையில் முழுமை பெறுவோம்.



தனிமை என்று தனித்து ஒன்று இல்ல.


அது ஒரு மன நிலை.


இரா.செ.




Comments

Popular posts from this blog

வாங்க" டீ" சாப்பிடலாம் !!!

தம்பட்டம் அடிக்கிறேன்; வேறு என்ன செய்ய ....