வாங்க" டீ" சாப்பிடலாம் !!!
'டீ ' சாப்பிடும் போது ஏற்படும் ஒரு சில சாகசங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். "டீ " என்பது ஒரு 'குடிநீர்' என்பதைத் தாண்டி , அது ஒரு ஊக்க சத்தியாக, உந்து சக்தியாக, சிந்தனைப் பெருக்காக, சிறகடிக்கும் எண்ணங்களை சீர் செய்யும் ஒரு யாகமாக, சமூக உரையாடல்களின் ஒரு அங்கமாக, மேலும் சொல்லப் போனால் ஏழைகளின் பங்காளியாக , ஒரு விருந்துக்கு ஒப்பான ஒரு மனநிறைவை ஏற்படுத்தித் தரும் ஆன்ம பலமாக ....( அறிமுகம் ஏற்பட்டு ஒரு சில நொடிப் பொழுதில் நாம் அழைப்பது - வாங்க' டீ ' சாப்பிட்டுக் கொண்டே பேசலாம். ஆக இங்கே பணம் பெரிது இல்லை ; பெரிதினும் பெரிது அகம் !!.) நம்மிடையே குடி கொண்டு இருக்கும் இந்த 'டீ ' அதிக செலவு இல்லாமல், நம்மை பலரிடம் அறிமுகம் செய்கிறது. இந்த 'உலவியலை' ஆராய்ச்சி செய்பவரிடம் விட்டு விடுகிறேன். -என்னுடைய வாதம் ; ஏழை ,பணக்காரன் பேதம் இன்றி ஒரு சில நேரங்கள் நம்மை இணைக்கின்றன. (உதாரணமாக ரயில் பயணங்கள்) இதை தமிழில் "தேனீர் " என்று சொல்கிறோம். மீண்டும் - தேனீர் பற்றிய உண்மை தரவுகள் எழுத்து அறிவித்த இறைவனுக்கே சாத்தியம். ஆம் ! தேனும் , (ஆம் T
Comments
Post a Comment