தைபூசம் - வள்ளலார் பாதை
♦️♦️தை பூசம் ஸ்பெஷல்: 10 🌹 வள்ளலார்- பகுதி 1 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி அன்பு உருவம் பெற்று அருள் நிலை அடைந்து இந்த மண் உலகினில் உயிர்கள் எல்லாம் வருந்தும் வருத்தத்தைப் போக்கவும் அகத்தே கருத்து புறத்தே வெளுத்திருக்கும் மக்கள் அனைவரையும் உலகத்தில் திருத்துவதற்கா க இறைவனால் வருவிக்கவுற்றவர் திருவருட் பிரகாச வள்ளலார். வாழையடிவாழையாக வந்த திருக்கூட்ட மரபி ல் வந்தவர் வள்ளலார். அன்றைய தென்னாற் க்காடு மாவட்டம் இன்றைய கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டம் மருதூர் என்ற ஊரில் 05-10- 1823 ஆம் வருடம் சுபானு வருடம் புரட்டாசி மாத ம் 21 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணிக்கு சித்திரை நட்சத்திரத்தி ல் பிறந்து முத்திரைப் பதிக்க வந்தவர் வள்ளலார். இவர் இயற்பெயர் இராமலிங்கம். 🌹பெற்றோர்கள்: தந்தையார் : இராமையா பிள்ளை தாயார் : சின்னம்மையார் 🌹உடன் பிறந்தோர் : சபாபதி ...