Posts

கவிஞர்களே !! உங்கள் கவனத்திற்கு !!!

வணக்கம். ஐந்திணை ஐந்நூறு நூலிற்கு,         குறிஞ்சி திணையில் எழுதுபவர்கள் பாலை திணையிலும்          முல்லை திணையில் எழுதுபவர்கள் நெய்தல் திணையிலும்     மருதம் திணையில் எழுதுபவர்கள் நெய்தல் திணையிலும்          நெய்தல் திணையில் எழுதுபவர்கள் முல்லை திணையிலும்          பாலை திணையில் எழுதுபவர்கள் முல்லை திணையிலும்  2 பாடல்கள் இயற்றி அனுப்பி வைக்க இறுதி நாள் 31-08-2023. தமிழில் எழுதினால் அவமானமில்லை வருமானம் என்பதை உலகிற்கு எடுத்துரைக்கும் வகையில் இந்த நூலில் ஆசிரியராகப் பங்கெடுக்கும் பாவலர்கள் அனைவரையும் புத்தகக் காட்சி மேடையில் விலைமதிப்புள்ள ஒன்றோடு நாம் சிறப்பிக்கும் வண்ணம் சில முயற்சிகளை முன்னெடுத்து வருகிறோம். நிச்சயம் வெற்றி பெறுவோம். ஆகவே 2 பாடலா.. மரபா.. என மனம் தளராமல் தாங்கள் முழு மனதோடு பங்கேற்று வெற்றி பயணத்தில் உடன் வர ஒவ்வொருவரையும் தமிழன்போடு அழைக்கிறோம். இணையாதவர்கள் இணைய விரும்பினால் இணைந்து கொள்ளலாம். இந்த நூலில் இணையாமல், குழுவில் இருப்பவர்கள் குழுவிலிருந்து விலகாமல் குழுவில் தொடர்ந்து பயணிக்கலாம். நாம் முன்னெடுக்கும் அடுத்தடுத்த முயற்சிகளில் உங்களுக்கு விருப்பமான நிகழ்வுக

சிலையை விட்டு தெய்வம் புறப்பட்ட கதை ....

அன்று ஞாயிறு.காலை 12 மணி இருக்கும். வீட்டு வாசல் கதவின் அருகில் ஒரு கம்பிரமான நபர் நின்று கொண்டு இருந்தார். அவர் கோட்டும் , சூட்டும் அணிந்து இருந்தார். நல்ல சிகப்பு நிறம். வயது 45 வரை இருக்கலாம். வாசல் அருகில் ஒரு ஜீப் நின்று கொண்டு இருந்தது; அதன் மேற் கூறையில் சிகப்பு கலர் லயிட் எரிந்து கொண்டு இருந்தது. வீட்டிற்குள் வரலாம என்று கேட்டவரை "வாங்க" என்று சொல்லி வரவேற்றான் செல்ல துரை. குடும்பத்தில் உள்ள அனைவரையும் கூப்பிட்டார் அந்த நபர். மனைவி மக்கள் என்று ஒன்று திரண்டனர். முதியவர்கள் இருவர் உட்பட மொத்தம் 7 நபர்கள், அதில் 3 குழந்தைகள். ஆக முதியவர்கள் துரையின் பெற்றோர்கள் தான் என்று முடிவுக்கு வந்தார் அந்த வெள்ளை நிற ஆசாமி. நீண்ட கவரை எடுத்தார்; அன்புதுரையிடம் கொடுத்து, எல்லோரையும் சேர்த்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். பெரியவர்கள் இருவரையும் அழைத்தார் .அவர்கள் காலில் விழுந்து வணங்கினார். இந்த நிகழ்வுகள் எல்லாம் புகைப்படம் மற்றும் ஒளிப்படமாக எடுக்கப்பட்டது. சால்லைகள் செல்ல துரைக்கு போத்தப்பட்டு, குழந்தைகளுக்கு இனிப்புகள் கொடுக்கப்பட்டன. மனைவி செல்லம்மாள் பூங்கொத்தை பரிசாக பெற்றாள

காட்சியின் கோலங்கள்

 காட்சியின் கோலங்கள்  குழாய் அடியில் , குடங்கல் காத்திருக்கின்றன; தண்ணீர் தாமதம் ! *********************** அனுபவம் கடவுள் உணர்ந்தது இன்று ; உணர்ந்த பின் நேற்று; உணர துடிப்பது நாளை !! ***************** கார்மேகங்களின் பட்டின பிரவேசம் வாகனங்கள் அணிவகுத்து  காத்து இருக்கின்றன; வானத்தை நோக்கி, மேம் பாலத்தில் ........... ************** வாழ்க்கை ஒரு உண்மை சம்பவம். வாழவே பிறந்தோம் !!!! வாழ்ந்தே  காட்டுவோம் ??? கேள்விகளை வேள்விகளாக  ஆக்குவோம் ; ஆச்சிரியங்களை அனுபவங்களாக பெறுவோம். அனுபவத்தை ஆனந்தமாக்குவோம். *************.

வாங்க" டீ" சாப்பிடலாம் !!!

 'டீ ' சாப்பிடும் போது ஏற்படும் ஒரு சில சாகசங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். "டீ " என்பது ஒரு 'குடிநீர்' என்பதைத் தாண்டி , அது ஒரு  ஊக்க சத்தியாக, உந்து சக்தியாக, சிந்தனைப் பெருக்காக, சிறகடிக்கும் எண்ணங்களை சீர் செய்யும் ஒரு யாகமாக, சமூக உரையாடல்களின் ஒரு அங்கமாக, மேலும் சொல்லப் போனால் ஏழைகளின் பங்காளியாக , ஒரு விருந்துக்கு ஒப்பான ஒரு மனநிறைவை ஏற்படுத்தித் தரும் ஆன்ம பலமாக ....( அறிமுகம் ஏற்பட்டு ஒரு சில நொடிப் பொழுதில் நாம் அழைப்பது - வாங்க' டீ ' சாப்பிட்டுக் கொண்டே பேசலாம். ஆக இங்கே பணம் பெரிது இல்லை ; பெரிதினும் பெரிது அகம் !!.) நம்மிடையே குடி கொண்டு இருக்கும் இந்த  'டீ ' அதிக செலவு இல்லாமல், நம்மை பலரிடம் அறிமுகம் செய்கிறது. இந்த 'உலவியலை' ஆராய்ச்சி செய்பவரிடம் விட்டு விடுகிறேன். -என்னுடைய வாதம் ; ஏழை ,பணக்காரன் பேதம் இன்றி ஒரு சில நேரங்கள் நம்மை இணைக்கின்றன. (உதாரணமாக ரயில் பயணங்கள்) இதை தமிழில் "தேனீர் " என்று சொல்கிறோம். மீண்டும் - தேனீர் பற்றிய உண்மை தரவுகள் எழுத்து அறிவித்த இறைவனுக்கே சாத்தியம். ஆம் ! தேனும் , (ஆம் T

எனக்குள் ஒருவன் !!!

  வாசகர்களுக்கான கேள்வி ??  “இலக்கியம் என்பது யாது?  ஜெனரஞ்சகமாக எழுதுவதா ! தத்துவார்தமா?”,  “மறைந்த சாகித்ய அகடமி விருது பெற்ற திரு.ஜெயகாந்தன் அவர்கள் சிறுகதை மற்றும் நாவல்களில் தமிழகத்தில் ஏற்படுத்திய தாக்கம் பெரியது. ஆனால் அவர் சுந்தர ராமசாமி போன்று கொண்டாட படவில்லையே ஏன்?” எனக்குள் ஒருவன் !!! “பிறப்பின் மேன்மை பிறர் மதித்து நடத்தல். பிறப்பின் உயிர்மெய் சுயமரியாதை.  பிறப்பின் மகிமை தன் உணர்வு அடைதல். பிறப்பை ஒவ்வொரு நொடியாய் கொண்டாடுவோம். கண்டு கொள்வோம். வாழ்க வாழ்கவே!” TABLE OF CONTENTS  SNo      Name of the stories  1 . இரவுகள் என்றும் கனவுகள். 2  .இலக்கியம் "சோறு” போடுமா? 3 .கடவுளும் அவருடைய             பரிபூரண உலகமும். 4.  "மனிதம் வளர          தமிழைக்காப்போம்" 5.   Raju and His Prejudices 6. "மூன்றாம் பிறை - முருகேஷ்.-          ஒரு நேர்காணல் " 7.  தனிமை x தன்னுணர்வு 8.  உலக நீதி-நியதியா?  9."வாழ்ந்தே காட்டுவோம்" 10. கவிதை நேரம் ="அடி, அடியாய் 11.குடியை" மறந்தோம்-மனிதம் படிப்பு என்கிற மமதையில் மதம்பிடித்து ஆடுகிறது. 12. ஏன் இந்த கோபம்